
நாம் சினிமாவில் சில நகைச்சுவை காட்சிகளை பார்த்திருப்போம். அந்த காட்சிகளை நினைத்தாலே நம்மளை அறியாமல் சிரித்துக்கொண்டே இருப்போம்.. அந்த வகையில் ஒன்றுதான் இந்த நகைசுவை காட்சி; இதை பார்க்காமல் யாரும் இருக்கமாட்டார்கள் ..! அதாவது வைகை புயல் வடிவேலு ஒரு படத்தில் நடத்துனராக பணியாற்றுவார் அப்போது. போண்டாமணி அவர்கள் பாம்பை வைத்து பஸ் சீட்டில் இடம் பிடிப்பார்… பார்ப்பதற்கு நமக்கு நகைச்சுவையாகத்தான் இருக்கும்.
ஆனால் உண்மையிலேயே அது மாதிரியான சம்பவங்கள் நடந்தால். எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள்…! ஆமாம்.. உண்மையில் இது போல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது தெலுங்கானாவில். ஆனால் கொஞ்சம் வித்தியாசம்..!!
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியில் அரசு பேருந்தில் மது போதையில் பெண் பயணி ஒருவர் ஏறி உள்ளார். மது போதையில் இருந்த அந்த பெண் பயணி இறங்குவதற்கான இடம் வந்ததும் பேருந்தை நிறுத்துக்கோரி நடத்தினரிடம் கூறியுள்ளார்.
ஆனால் நடத்துனர் அந்த பகுதியில் நிறுத்தம் இல்லாததால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளும்படி பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மது போதையில் இருந்த பெண் பயணி தனது பையில் வைத்திருந்த பாம்பை எடுத்து நடத்துனர் மீது வீசி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ஓட்டுநர் ,நடத்துனர் என அனைவரும் “ஆளை விட்ட போதும்” என்று ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது ,. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..