லண்டனில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் மேத்யூ ஸ்மித். இவர் லண்டனில் இருந்து கொண்டு இந்திய இளைஞர்களை தவறான முறையில் வழிநடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இளம் வயதினரை குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அணுக செய்து அவர்களது ஆபாச படங்களை அனுப்ப சொல்லி கேட்டுள்ளார்.

இதற்கு அவர் பணமும் கொடுத்துள்ளார். இவ்வாறு பணத்திற்கு பெறப்படும் ஆபாச படங்களை அவர் டார்க் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இது குறித்து கண்டுபிடித்த நேஷனல் கிரைம் ஏஜென்சி மேத்யூ ஸ்மித்தை கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் அவர் மீது போடப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 12 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.