இந்திய பெருங்கடலில் மூன்று சீன உளவு கப்பல்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் ஒரு கப்பல் அந்தமான் தீவின் மேற்கு பகுதியில் நின்று இந்திய கடற்படை கப்பல்களின் நகர்வுகளை கண்காணிப்பதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு கப்பல் மாலத்தீவு அருகேயும் மூன்றாவது கப்பல் மொரிசியஸ் தீவு அருகேயும் சுற்றித் தெரிவதாக தெரிகின்றது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.