இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமி கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படாத நிலையில் இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருவதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.