
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்கு சென்ற நிலையில் அதிபர் புதினை சந்தித்து அவருடன் நட்புறவை பாராட்டினார். இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்யா உடனான நட்புறவை பயன்படுத்தி உக்ரைன் மீதான போரை நிறுத்த பிரதமர் மோடி முயற்சி செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க இந்துஸ்தானி செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் மேக்கலியோட் பேட்டி கொடுத்துள்ளார்.
அவர் பேசியதாவது, இது போருக்கான காலம் இல்லை என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறியுள்ளார். இந்தியா உட்பட அனைத்து நட்பு நாடுகளும் உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும். இந்நிலையில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே மிகவும் விசேஷமான நட்புறவு இருக்கிறது. எனவே இந்த நட்புறவை பயன்படுத்தி போரை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உக்ரைன் மீது ஐநா விதிகளை மீறி ரஷ்யா போர் நடத்தி வருகிறது என்று கூறினார்.