உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணங்களில் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பாதுகாப்பு நடவடிக்கையாக சில போலி whatsapp கணக்குகள் முடக்கப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 75,48,000 whatsapp கணக்குகள் நீக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் மாதாந்திர அறிக்கையின்படி 75 லட்சத்தில் 19 லட்சம் கணக்குகளை தாமாக முன்வந்து நீக்கியுள்ளது. அதே சமயம் செப்டம்பர் மாதத்திலும் மெட்டா நிறுவனம் 71 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது