
அமெரிக்க நாட்டில் பிரபல நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இன்று காலை தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் இந்தியாவிற்கு விரைவில் மிகப்பெரிய விஷயம் காத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹிண்டன்பர்க் நிறுவனமானது வணிக நிறுவனங்களின் முறைகேடு மற்றும் நிதி போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும்.
அந்த வகையில் கடந்த வருடம் அதானி குழுமத்தின் பங்குகள் மற்றும் முறைகேடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. மேலும் இதனால் தற்போது இந்தியாவிற்கு மிகப்பெரிய விஷயம் காத்திருக்கிறது என்று அந்நிறுவனம் பதிவிட்டுள்ளது இந்த முறை யாருக்கு என்று பேசும் பொருளாக மாறி உள்ளது.
Something big soon India
— Hindenburg Research (@HindenburgRes) August 10, 2024