தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் முதல்முறையாக சென்னை கிண்டியில் முதியோருக்கான தனி மருத்துவமனை தொடங்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .

அதாவது இதயநாளம், சிறுநீரக நோய் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இவர் இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் முதியோருக்கான தனி மருத்துவமனை சென்னை கிண்டியில் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்