இந்தியாவின் முன்னணி நரம்பியல் நிபுணரான டாக்டர் சியு வேல்முருகன் உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். அவருடைய உடல் சென்னையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நேற்று அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். மேலும் இதே போன்று அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நேரில் சென்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.