அமெரிக்க விசா சுற்றுலா, வணிகம், படிப்பு, மற்றும் வேலை என பல வகைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தூதரகம் இந்த ஆண்டு இந்தியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் கூடுதல் அதிகாரிகளை நியமித்தும், சனிக்கிழமைகளில் தூதரக அலுவலகங்களை திறந்தும் விசா ஒப்புதல் நடைமுறையை துரிதப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது குறித்து மும்பையில் உள்ள அமெரிக்க தூதரக தலைவர் ஜான் பல்லார்ட் கூறியதாவது, “இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த வருடம் 8 லட்சம் விசாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அவற்றில் கல்விக்கான விசா மட்டும் 1.25 லட்சம் ஆகும். இந்த வருடம் அதிக விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்க திட்டமிட்டு இருக்கின்றோம். அந்த வகையில் முதன்முறையாக பி1, பி2 சுற்றுலா மற்றும் தொழில்முறை பயண விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு காத்திருப்பு காலம் குறைக்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவில் 2.5 லட்சம் பி1 மற்றும் பி2 விசாக்கள் வெளியிட்டு இருக்கிறோம். விசா புதுப்பிக்க இனி மக்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பம் அனுப்பலாம். அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் இந்த விசா காத்திருப்பு காலத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.