தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் “இந்திய காலணி அளவு முறையை” உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தற்பொழுது ஐரோப்பிய மற்றும் பிரெஞ்சு தரநிலைகளை பின்பற்றி வருகிறோம். இந்நிலையில் இந்தியர்களுக்கு ஏற்ற வகையில் ‘பா’ அளவு முறையானது இருக்கும் என கூறப்படுகிறது.

பாரதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ‘பா’ என பெயரிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு இது நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதில் முழுக்க முழுக்க இந்தியர்களை சோதனை செய்து காலணிகள் உருவாக்கப்படும்.