சமூக ஊடகங்களில் தற்போது ஒளிரும் ஒரு மனம் கவர்ந்த காணொளி, மத எல்லைகளைத் தாண்டிய ஒற்றுமையின் அழகை வெளிப்படுத்துகிறது.
அமைதியான ஒரு தெருவில், முஸ்லிம் குடும்பம் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் காட்சி, நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. இந்தியாவின் பண்டிகை ஒற்றுமையை பிரதிபலிக்கும் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது.
இந்த காணொளியில், குடும்பத்தினர் சாலையோரத்தில் கவனமாக பட்டாசுகளை வெடித்து, தங்களின் சிறு மகன்களின் “நாமும் மற்றவர்களைப் போல தீபாவளி கொண்டாட வேண்டும்” என்ற அப்பாவியான விருப்பத்தை நிறைவேற்றுகின்றனர்.
View this post on Instagram
சமூகத்தின் தீர்ப்போ அல்லது விமர்சனமோ அச்சுறுத்தாமல், அவர்கள் ஒரு அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாக பண்டிகையை அனுபவிப்பது காணொளியில் வெளிப்படுகிறது.
இது வெளியான சில மணி நேரங்களுக்குள் ஆயிரக்கணக்கான பார்வைகளையும், இதயத்தைத் தொடும் கருத்துகளையும் பெற்றுள்ளது. ஒரு சமூக ஊடக பயனர் தனது கருத்தில், சில சமயங்களில் குழந்தைகளின் பிடிவாதமும் அழகாகவே இருக்கும் என்று குறிப்பிட்டார்.
மற்றொருவர் “இந்தக் காட்சி என் இதயத்தை உருக்குகிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
