இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி (86) புற்றுநோயால் காலமானார். சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று உயிரிழந்தார். சில்வியோ 4 முறை இத்தாலியின் பிரதமராக இருந்தவர். இவர், ரியல் எஸ்டேட் மற்றும் மீடியாவில் முதலீடு செய்து கோடீஸ்வரராகவும் இருந்தவர். 1994ல் அரசியல் கட்சியை நிறுவி, அதே ஆண்டில் பிரதமரானார்.