தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற தொடர் வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் திரிஷா 14 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நிலையில், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. அதாவது இயக்குனர் ரத்தினகுமார் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் ஒரு கண்ணாடியை மட்டும் கையில் வைத்தபடி டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக கூறினார்கள். இந்நிலையில் லெஜெண்ட் சரவணனும் தற்போது லியோ படத்தில் இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள லக்ஸுரியஸ் ஹோட்டலில் தற்போது லெஜெண்ட் சரவணன் தங்கி உள்ளார்.

இதன் காரணமாக லெஜெண்ட் சரவணன் காஷ்மீரில் பனி படர்ந்த அழகினை வீடியோவாக எடுத்து தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு காஷ்மீரில் பனிக்கு நடுவே நின்று செல்பி எடுத்தும் புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது லியோ  படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லெஜெண்ட்  சரவணன் காஷ்மீரில் இருப்பதால் அவரும் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தீயாக பரவி வருகின்றது.