தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என இதய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான நடைமுறைகள் தற்போது இல்லை, மாநில பேரிடராக மாநில அரசு அறிவித்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் பேசிய நிர்மலா சீதாராமனுக்கு கே எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்மலா சீதாராமன் தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்க முடியாது, தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது, கூடுதல் சிறப்பு நிதி வழங்க முடியாது என வன்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கோரிக்கையை நிராகரித்து மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.