சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. சிப்ஸ் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு கிடங்கில், இளைஞர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் அந்த சிப்ஸ் பாக்கெட்டுகள் மீது படுத்துக்கொண்டு உருளும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்கள் இவ்வளவு சுகாதாரமற்ற முறையில் கையாளப்படுவதைக் கண்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும், அருவருப்பும் அடைந்துள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த கேள்விக்குறிகளை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “இது போன்ற செயல்கள் மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் விளையாட்டு” எனத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Actual indians🇮🇳 (@actualindians)

“>

மேலும் ஒருபுறம் வேடிக்கைக்காகவும் லைக்குகளுக்காகவும் இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் போக்கு கவலையளிப்பதாக உள்ள நிலையில், மறுபுறம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக மையங்களில் போதிய கண்காணிப்பு இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.