தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து தஞ்சை போக்குவரத்து போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ஒரு கிலோ பூண்டு விலை இல்லாமல் வழங்கியுள்ளனர்.

தற்போது ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் நிலையில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பரிசாக விலை இல்லாமல் வழங்கி வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இதன் மூலம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.