திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமான காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின் அன்பாலும் உண்டு.

அதனால் தான் அரசியலுக்கு நான் வந்தேன். திராவிட மாடல் என்பது ஒரு சித்தாந்தம். தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும். மகளின் உரிமை தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் இவை எல்லாம் இந்தியா முழுவதும் வர வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.