1990 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில், காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த செவிலியர் சர்லா பட் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை நீண்ட வருடங்களாக விசாரித்து வந்த ஜம்மு காஷ்மீர் மாநில புலனாய்வு அமைப்பு, தற்போது ஸ்ரீநகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 737 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தத் திகைப்பூட்டும் குற்றப்பத்திரிகையில், ஜே.கே.எல்.எஃப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் தான் இந்தக் கொலையின் முக்கிய சூத்திரதாரி என்றும், அவனது உத்தரவின் பேரிலேயே சர்லா பட் கொலை செய்யப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற மூன்று குற்றவாளிகள் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், நான்காவது குற்றவாளி பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து, பாதிக்கப்பட்ட சர்லா பட்டினுடைய குடும்பத்தினர் தங்களின் கடுமையான மனவேதனையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சர்லா பட்டினுடைய உறவினர் பிர திமன் கிருஷ்ணா பட் கூறுகையில், “இது என்ன நீதி? இதில் மிக நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இதில் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது? இது எங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குச் செய்யப்படும் ஒரு கேலி கூத்து” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இந்த நடவடிக்கையை மிக முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும் என்றும், இவ்வளவு காலதாமதமான நீதி தங்களுக்கு எந்த ஒரு நிம்மதியையும் தரவில்லை என்றும் அக்குடும்பத்தினர் தங்களின் உத்வேகமான மற்றும் ஆழமான அதிருப்தியைப் பதிவு செய்துள்ளனர்.
