கூடலூரை அடுத்த அய்யன் கொல்லியில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பேருந்துக்காக நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தை கைகாட்டி அவர் நிறுத்திய நிலையில் அந்த பேருந்து நிற்காமல் சென்றுள்ளது.

அதன் பிறகு அந்தப் பேருந்து ஓட்டுனரிடம் ஏன் பேருந்து நிறுத்தவில்லை என அந்தப் பெண் நியாயம் கேட்டுள்ளார். இதற்கு இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா? என அலட்சியமாக அந்த ஓட்டுநர் பதிலளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழக கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்