தந்ஸானியா நாட்டின் கிராமப்புறத்தில் எடுக்கப்பட்ட ஒரு விசித்திரமான வீடியோ தற்போது உலகம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு குதிரையின் மீது, அந்த ஊர் வழக்கப்படி ஒரு கன்னிப் பெண் மூன்று முறை குதிக்கும் சடங்கைச் செய்தார். ‘மரணக் குதிரைச் சடங்கு’ என்று அழைக்கப்படும் இந்த முறையைச் செய்த சில நிமிடங்களிலேயே, அசைவற்றுக் கிடந்த அந்த குதிரை திடீரென எழுந்து நின்றது அங்கிருந்தவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.

இந்த அதிசயக் காட்சி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ​இருப்பினும், இந்தச் சம்பவம் பாரம்பரிய நம்பிக்கைக்கும் நவீன அறிவியலுக்கும் இடையிலான மோதலை உருவாக்கியுள்ளது. அந்த ஊர் மக்கள் இதை ஒரு ஆன்மீக மருத்துவ முறையாகப் பார்த்தாலும், விலங்கு நல ஆர்வலர்களும் மருத்துவர்களும் இதை ஏற்க மறுக்கின்றனர்.

குதிரை தானாகவே குணமடைந்ததைத் தற்செயலான நிகழ்வு என்று கூறும் அவர்கள், முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காமல் இதுபோன்ற சடங்குகளை நம்புவது ஆபத்தானது என எச்சரிக்கின்றனர். எது எப்படியோ, இணையவாசிகள் மத்தியில் இது ஒரு பக்கம் ஆச்சரியத்தையும், இன்னொரு பக்கம் விவாதத்தையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.