இன்று இஸ்லாமியர்களால்  உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  கடந்த ஒரு மாத காலமாக இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து, இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்நாளில் ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பை பரிமாறும் விதமாக பிரியாணி செய்து வழங்குவார்கள். இந்த நாளில்  சமூக வலைதளங்களில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன், ரமலான் அன்று தனது இஸ்லாமிய நண்பர்கள் கொடுத்த பிரியாணிகளை புகைப்படமெடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்பால தானா சேர்ந்த பிரியாணி… இன்று ரமலான் கொண்டாடும் அனைத்து இனிய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். ஈத் முபாரக்” என தெரிவித்துள்ளார்.