காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் இடைத்தேர்தலில் தங்கள் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தேமுதிக தலைமை இன்று ஆலோசனை நடத்தியது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிறுவனத் தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று மாலை தங்கள் நிலைபாடு குறித்து விஜயகாந்த் தரப்பில் இருந்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.