மாலி நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோழிக்கோடு பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் ஏராளமானோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி 70க்கும் அதிகமானவர்கள் இந்த சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சுரங்கப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதது தான் விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.