ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் எம்பிஎஸ் ஆஸ்பத்திரிக்கு வழக்கறிஞர் மனோஜ் ஜெயின் தன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவருடைய மகன் காயமடைந்த நிலையில், சிகிச்சையளிப்பதற்காக ஸ்கூட்டரில் நேராக லிப்டிற்குள் சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனை நிர்வாகத்தின் துணை கண்காணிப்பாளர் கர்னேஷ் கோயல் இதுபற்றி கூறியதாவது, மனோஜின் ஸ்கூட்டரை வாசல் பகுதி வரை போகவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

எனினும் அவர் மருத்துவமனையின் லிப்டுக்குள் தன் மகனுடன் ஸ்கூட்டரை ஓட்டி சென்றுள்ளார் என தெரிவித்திருக்கிறார். இதனிடையே வீல்சேர் வேண்டும் என மனோஜ் கேட்டுள்ளார். அப்போது அவருக்கு தேவையான வீல்சேர் வசதி இல்லை. இதன் காரணமாக  மருத்துவமனை நிர்வாகம் அவர் ஸ்கூட்டரில் வாசல் பகுதி வரை போக மட்டுமே அனுமதித்த நிலையில், அதை மீறி அவர் லிப்டிற்குள் ஸ்கூட்டருடன் சென்றுள்ளார் என கோயல் கூறினார்.