ஹரியானா பஞ்ச்குலாவில் நேற்று பெய்த கன மழையால் ஆற்றின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கிடைத்த தகவல்களின் படி, பஞ்ச்குலாவிலுள்ள காரக் மங்கோலி என்ற ஆற்றின் கரையில் ஒரு பெண் தன் காரை நிறுத்தி இருந்தார் என சொல்லப்படுகிறது.

அப்போது கன மழை காரணமாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனிடையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த அந்த பெண் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து கிரேன் உதவியுடன் காரை ஆற்றிலிருந்து அகற்றும் முயற்சி நடந்தது என தகவல்கள் தெரிவிக்கிறது.