இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அதிக அளவு ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இந்த நிலையில் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில் உட்பட அனைத்து விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளின் கன்ஃபார்ம் செய்யப்பட்ட பயணம் செய்யும் பயணிகளை போலவே ஆர்ஏசியில் ஏசி இருக்கையில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் போர்வை படுக்கை விரிப்புகள் கம்பளி தலையணை ஆகியவை கட்டாயம் வழங்க வேண்டும் என்று அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ஆர்ஏசி பயணிகளுக்கு படுக்கை விரிப்பு மற்றும் போர்வை வழங்கப்படாமல் மோசடி நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.