நடிகை நித்தியா மேனனிடம் பேட்டி ஒன்றில் பெண்கள் அழுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அழுவது நிச்சயமாக பெண்களுக்கு ஒரு ஸ்ட்ரென்த் தான். நானும் அப்படித்தான் அழுவேன். ஆனால் அதேசமயம் ஆண்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. பாவம் அவர்களால் அழ முடியாது. அழுவது ரொம்ப கஷ்டம்.

சிறிய வயதிலிருந்தே முதல் ஆம்பள பசங்க அழக்கூடாது என சொல்லி சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். உண்மையில் அழுவது மிகவும் நல்லது. மனதில் உள்ள பாரத்தை எல்லாம் அழுது முடித்துவிட வேண்டும். அது உங்களை மேலும் வலிமையாக்கும் என கூறியுள்ளார்.