தமிழ், தெலுங்கு, கன்னட திரை உலகில் 1990’களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஆமனி. இவர் தமிழ் சினிமாவில் ஹானஸ்ட் ராஜ், தங்கமான தங்கச்சி, முதல் சீதனம் மற்றும் இதுதாண்டா சட்டம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகை ஆமனி நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் நடிகை ஆமினி ஒரு பேட்டியில் சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் சிலர் ஆபாசமான முறையில் பேசிவிட்டு அதையே  நகைச்சுவை போல் கருதினார்கள். பலர் என்னை தனியாக வரும்படி அழைத்தார்கள்.

அதன்பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் தங்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என சிலர் கூறினார்கள். தமிழ் சினிமா மூலம் என்னுடைய திரையுலக பயணம் தொடங்கிய நிலையில் 2 வருடங்களுக்கும் மேலாக வாய்ப்புகளுக்காக போராடினேன். மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் இப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டுமா என்று நான் அதிர்ச்சியில் இருந்த போது அப்படி செய்யாமலேயே சினிமாவில் வளர முடியும் என என் அம்மா தான் தைரியம் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.