ஆன்லைனில் ஏமாற்றப்பட்டவர்கள் சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குள் வங்கியில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் பணத்தை திரும்ப பெற முடியும். அதாவது அன்றைய தினம் அருகில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். மேலும் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும். அது முடியாவிட்டால் புகார் ரசீதை எடுத்துக் கொள்ளுங்கள்.

மோசடியின் தன்மையை கடிதத்தில் எழுதி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட ரசீதை இணைத்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். RBI மின்னஞ்சல் ஐடி [email protected] சென்று இரண்டு நகல்களை அனுப்பவும். அதில் உங்கள் வங்கி மின்னஞ்சல் ஐடியை சேர்க்கவும்