ரேஷன் கடைகள் தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் 80 கோடி மக்களுக்கு சேவை செய்யும் ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமான PDS கடைகள் உள்ளன. இதன் காரணமாக வரும் நாட்களில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க வேண்டி வரும்.

இந்நிலையில் அரசு ரேஷன் கடைகள் மூலம் தரமான அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து மத்திய அரசு தற்போது ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.