ஆன்லைன் லுடோ கேம்முக்கு அடிமையான இளம் பெண் ஒருவர் நான்கு லட்சம் ரூபாயை இருந்து தனது இரண்டு குழந்தைகளுடன் ஊரை விட்டு வெளியேறினார். பெங்களூரை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் ஆன்லைன் கேமில் நான்கு லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இதற்கு முன்னதாக பணத்தை இழந்த இளம் பெண் தங்கத்தை அடகு வைத்துள்ள நிலையில் அதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடுவதை நிறுத்துவதாக இளம் பெண் கணவரிடம் உறுதி அளித்த நிலையில் அந்தப் பெண் குழந்தை மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகி உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.