இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் ஆன்லைன் மூலமாக பல மோசடிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் ஆன்லைன் கேம்முக்கு அடிமையாகி பணத்தை இழந்து மோசடி வலைக்குள் சிக்கி விடுகின்றனர். இது தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களை இளைஞர்கள் விளையாட அனுமதிப்பதற்கு ஒரு கட்டமைப்பை தயாரிக்கும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசின் இந்த புதிய விதிப்படி ஆன்லைன் கேம்கள் அனைத்திற்கும் இந்த ஒரு ஒழுங்குமுறை ஆணையத்தால் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பணத்தை உள்ளடக்காத ஆன்லைன் கேம்களுக்கு எந்த வித ஒப்புதலும் தேவையில்லை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஆன்லைன் கேம் தொடர்பான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.