அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசியதாக ஆன்மிக பேச்சாளரும், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவருமான ஆர்பிவிஎஸ் மணியனை தனிப்படை போலீசார், அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சனாதனத்தை உயர்த்தி பேசிய அவர், அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியல் சமூக மக்களை இழிவுபடுத்தி மிக மோசமாக பேசியதால், முற்போக்கு அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது