ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக விவசாய தொழிலாளிகளை ஊக்குவிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் கிரைய தொகையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்தபட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் வகையில் அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின் படி திட்ட தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் மானியம் விடுவிக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரைய தொகையை தேசிய பட்டியல் இனத்தவர் நிதி மேம்பாட்டு கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு ஆறு சதவீதம் மிகக் குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ மூலம் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனுப்பி பயன்பெறலாம்.