தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் பேசி தமிழ்நாடு அரசுக்கு கேட்டிருக்கும் நிவாரண நிதியை வாங்கி கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், நாம் கொடுப்பதாக அறிவித்த 6000 ரூபாய் மத்திய அரசுதான் வழங்குகிறது என அண்ணாமலை கூறி வருகிறார்.

வெள்ளம் வந்தபோது பாதுகாப்பாக வீட்டில் இருந்த அவர் வெள்ளம் வடிந்ததற்குப் பிறகு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவரால் முடிந்தால் மத்திய அரசிடம் பேசி தமிழ்நாடு அரசு கேட்டிருக்கும் நிவாரண நிதியை வாங்கி கொடுக்க சொல்லுங்கள் என்று அமைச்சர் பேசியுள்ளார்.