ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக. 2023 ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  பான் -ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் இறுதிக்குள் முடிகிறது. முதலில் மார்ச் 30, 2023 வரை கொடுக்கப்பட்ட அவகாசம் பின்னர் ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. 1,000 ரூபாய் அபராதமாக செலுத்தி, ஆதார் – பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆதார் கார்ட் – பான் இணைப்புக்கான காலக்கெடு முடிந்துள்ள நிலையில் வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சிலர் ஆதார் – பான் இணைப்புக்குப் பிறகு சலான்களைப் பதிவிறக்குவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதனை தொடர்ந்து சலான் பணம் செலுத்திய பிறகு, அவர்கள் ஐடி இணையதளத்தில் இ-பே வரி பிரிவில் பணம் செலுத்தப்பட்டதா என்பதைச் சரிபார்க்கலாம். ஆதார் இணைப்பிற்கு சலான் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.