அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பதால் ஆண்களுடைய சீட்டையும் பெண்களே ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். இதனால் ஆண்களுக்கு இருக்கைகள் கிடைக்காமல் போகிறது. வேறு பேருந்துகளில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தெலுங்கானாவில் ஆண்கள் மட்டும் பயணம் செய்யும் பொருட்டு சிறப்பு பேருந்து அறிமுகம் செய்யபட்டது.

இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் படிகளில் தொங்கிக்கொண்டு செல்வதை தவிர்க்கும் விதமாக தெலங்கானாவில் சோதனை முறையே தொடங்கப்பட்ட ஆண்களுக்கான பேருந்து சேவை தொடங்கிய இரண்டு நாட்களிலேயே அந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்துக்கு ஆண்கள் மற்றும் மாணவர்களிடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.