நடிகர் பிரித்விராஜ் நடிப்பில், இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் கடந்த மார்ச் 28ம் தேதி வெளியான திரைப்படம் தான் ‘ஆடு ஜீவிதம்’. வெளியான முதல் நாளே ரூ.7.6 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது. படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த போதிலும், அடுத்தடுத்த நாட்களில் வசூல் தாழ்வு நிலையை நோக்கிச் சென்றது. இந்த நிலையில் 25வது நாளான இன்று(ஏப்.21) இந்த படம் உலக அளவில் ரூ.150 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.