பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் ‌ சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் 900 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்நிலையில் அனிமல் படத்தில் பாலிவுட் நடிகை மானுஷி சில்லர் நடிப்பதாக வதந்திகள் பரவியது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் மானுஷி சில்லர் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, எனக்கு சந்தீப் ரெட்டி வங்காவை பிடிக்கும். அதோடு படத்தில் நடித்த ராஷ்மிகா மற்றும் திரிப்தி டிம்ரியின் கதாபாத்திரங்களும் பிடிக்கும். மேலும் வதந்திகள் உண்மையாக இருந்திருந்தால் நான் ராஷ்மிகாவின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன் என்று கூறினார்.