ஆடி மாத பூஜைகாக இன்று மாலை 5 மணி அளவில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் பிரபலமான ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பை ஒட்டி சிறப்பு பூஜைக்காக தமிழ் மாதத்தில் முதல் ஐந்து நாட்கள் நடை திறக்கப்படும்.

அவ்வகையில் ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டாலும் நாளை முதல் 5 நாட்கள் அதாவது 21ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜூலை 21 ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோவிலின் வாயில் அடைக்கப்படும். எப்போதும் போல ஆன்லைன் முன்பதிவு மூலமாகவே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.