மின்சாரத்தில் இயங்கக்கூடிய தங்களுடைய வாகனங்களை இந்தியாவில் தயாரிக்க உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியா முடிவு செய்துள்ளது. க்யு 50 இ-ட்ரான் போன்ற கார்களை இந்த நிறுவனம் இறக்குமதி செய்து இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்றது. இதனால் அவற்றின் விலைகள் மிக அதிகமாக உள்ளன. இந்த நிலையில் ஆடி நிறுவனம் தற்போது எடுத்துள்ள இந்த முடிவால் கார்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.