தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இதற்கான தகுதி தேர்வு 40 வயதுக்கும் உட்பட்டவர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற விதி இருந்து வந்தது. இதற்கிடையில் பரவிய கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் நலனை கருத்தில் கொண்டு 2021 ஆம் வருடம் சிறப்பு அனுமதியாக ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 45 ஆக உயர்த்தப்பட்டது.

அதேபோல இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பு 50 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த வயது வரம்புக்கான சிறப்பு அனுமதியானது 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்தது. ஆனால் இனி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பொது பிரிவில் 42 வயது அடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அதேபோல இட ஒதுக்கீடு பிரிவில் 47 வயதை எட்டியவர்களும் விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது நேற்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.