தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் பதவி உயர்வு குறித்து அடிக்கடி ஏகப்பட்ட நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்சவரம்பில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆசிரியர்கள் நியமனத்தில் பொது பிரிவினருக்கு 53 வயதில், இதர பிரிவினருக்கு 58 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்ச வரம்பை விரிவுபடுத்த ஆராயப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார் .இதனை தொடர்ந்து சிறுபான்மையின பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு போராட்டம் நடத்தாமல் இனி இணையதளம் மூலமாக கோரிக்கை விடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென்று தனி இணையதளம் உருவாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.