அண்மையில் பள்ளிக்கரணை பகுதியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் பிரவீனின் மனைவி சர்மிளா இன்று தற்கொலை செய்து கொண்ட பெருந்துயரம் மிகுந்த வேதனையளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், தனது குடும்பத்தினரே யாவற்றுக்கும் காரணமென சர்மிளா தனது ‘தற்கொலை குறிப்பில்’ பதிவிட்டிருக்கிறார்.

‘அவர்களைக் கடுமையாகத் தண்டியுங்கள்’ என்பதே சர்மிளாவின் வலிமிகுந்த கோரிக்கையென தெரிகிறது. எனவே, பிரவீன், சர்மிளா ஆகியோரின் சாவுகளுக்குக் காரணமானவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும். அத்துடன், ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தின் தேவையை உணர்ந்து உடனடியாக அதனை இயற்றிட ஆவன செய்ய வலியுறுத்தியுள்ளார்.