உத்தரப் பிரதேசத்தில் தெரு விலங்குகளின் தாக்குதலால் அடிக்கடி மக்கள் உயிரிழந்து வருகின்றனர் அல்லது பலத்த காயமடைகின்றனர். சில சமயங்களில் காளைகள் வழியில் செல்வோரைத் தாக்குகின்றன, பசுக்கள் மக்களைத் துரத்துகின்றன. அவ்வகையில் கான்பூர் மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது. இங்கு ஒரு தெரு பசு, வயதான ஒரு முதியவரைத் துரத்தியது. சிறிது தூரம் ஓடிய பிறகு முதியவர் தடுமாறி விழுந்துவிட அப்போதும் பசு தனது கொம்புகளால் அவரைத் தூக்கி தரையில் வீசி கால்களால் மிதித்து கடுமையாகத் தாக்கியது.
#WATCH
कानपुर में एक गाय ने बुजुर्ग पर हमला बोल दिया। गाय ने बुजुर्ग को पैरों से रौंदते हुए उसे अधमरा कर दिया। घटन सीसीटीवी में कैद हो गई, जिसकी फुटेज अब सोशल मीडिया पर वायरल है। pic.twitter.com/X7RYJrkLGn— Dinesh Rathour Journalist (@DineshRath91184) September 18, 2025
அருகில் இருந்தவர்கள் முதியவரை காப்பாற்ற முயன்றனர், ஆனால் பசு அவரை கடுமையாகத் தாக்கி பாதி உயிருடன் விட்டது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முதியவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதியவர் பசுவை விரட்ட முயன்றபோது, அது கோபமடைந்து அவரைத் துரத்தியதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இந்த முழு சம்பவமும் அருகில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
