அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசிஇருந்தார். இது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து  உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி என சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது உதயநிதி தலைக்கு ரூ 10 கோடி விதித்த சாமியாரின் தலையை சீவினால் நான் 100 கோடி தருகிறேன். தலையை வெட்டு நாக்கை வெட்டு என சொல்பவர் சாமியார் அல்ல, கசாப்பு கடைக்காரர் என தெரிவித்துள்ளார்.