நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது. பாரத் என்றாலும் சூரத் என்றாலும் கவலை இல்லை, எனக்கு தமிழ்நாடு தான். இந்து என்ற பெயரும் ஆங்கிலேயர் வைத்தது தானே, அதையும் மாற்ற வேண்டியது தானே, ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் என பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டியதுதானே , என சீமான் தெரிவித்துள்ளார்.