அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியின் கூட்டணி குறித்து மிகவும் நிதானமாகவும் பண்பாகவும் பதில் அளித்துள்ளார். “நாங்கள் யாருடன் கூட்டணி சேரப்போகிறோம் என்பதை அந்தக் கூட்டணியின் தலைமைதான் முறைப்படி அறிவிக்க வேண்டும்; அதுவே சரியான பண்பு” என்று அவர் கூறியுள்ளார். தான் ஒரு கூட்டணிக்குத் தலைமை தாங்கினால் அதைத் தானே அறிவிப்பேன் என்றும், ஆனால் ஒரு பெரிய கூட்டணியில் இணையும்போது அந்தத் தலைமைக்கு மரியாதை கொடுத்து அவர்கள் சொல்லும் வரை காத்திருப்பதே முறை என்றும் அவர் அழகாக விளக்கியுள்ளார்.

​”கூட்டணி குறித்து அவர்கள் அறிவித்த பிறகு உங்களுக்கேத் தெரியவரும்” என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. தான் சேரும் கூட்டணியின் கௌரவத்தைக் குறைக்காமல், அதே சமயம் தனது முடிவில் உறுதியாக இருப்பதையும் அவரது பேச்சு உணர்த்துகிறது.