
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க புல்லி இனத்தைச் சேர்ந்த செல்லப் பெண் நாய், தனது உரிமையாளரின் மகனை விஷம் கொண்ட பாம்பிடம் இருந்து காப்பாற்றும் போது, பாம்பு கடித்ததால் உயிரிழந்தது.
இந்த சம்பவம், நாய்களின் விசுவாசத்துக்கு மீண்டும் ஒரு பெரிய எடுத்துக்காட்டு ஆகியுள்ளது. மீரட்டில் வசிக்கும் விவசாயி அஜய் குமார் என்ற நபரின் 23 வயது மகன் வான்ஷ், செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு விஷப் பாம்பு படுக்கையில் ஏற முயன்றது. வான்ஷ் அதைக் கண்டு பயந்தபோது, வீட்டில் இருந்த செல்ல நாய் அறைக்குள் வந்து பாம்புடன் நேரடியாக சண்டை போட்டு எதிர்கொண்டது. அந்த சண்டையில் பாம்பு நாயை கடித்ததால், அது உயிரிழந்தது.
பின்னர், குடும்பத்தினர் பாம்பை ஒரு குச்சியின் உதவியுடன் பிடித்து பெட்டியில் அடைத்து, அருகிலுள்ள கால்வாயில் விட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோவையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். ந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.